Thursday, November 02, 2006

என்ன தவம் செய்தனை!!!!!

எங்க ஊரு சிங்காரவேலருங்க!!

வருஷா வருஷம் பங்குனி மாசத்துல இவருக்கு ஒரு திருவிழா. பத்து நாளும் கோலாகாலமா ஒரு கலகலப்புதான்.

பத்து நாளும் மண்டகப்படி சில சில ஊருங்களுக்குன்னு கொடுத்தாலும், கடைசி நாளு திருக்கல்யாணம் நம்ப இளைஞரணிக்குதாங்க. பெருசுங்க சொல்றது என்னன்ன, வளருர புள்ளைக கல்யாணமெல்லாம் நம்ம கலாசாரத்துபடி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிக்கனுமுன்னுதான் இவுகள போட்டுருக்கோமுன்னு.(இது எப்படியிருக்கு!!!!)

இதுதான் சாக்குன்னு, நாங்க ஒரே கலக்கல்ஸ்தான்.....

மணப்பந்தல்














ஒவ்வொரு வருஷமும் போடற மணப்பந்தல், முந்தைய வருஷத்த மிஞ்சனுமுன்னு கூட்டத்துமேல கூட்டம் போட்டு மண்டைய குத்தி சீத்தல சாத்தனாரு ஆவாரு, இளைஞரணி ஆஸ்தான ஆர்கிடெக்ட். இவரு போடற வடிவத்த முந்தின நாளு ராத்திரி வரைக்கும் ராஜரகசியமா வைச்சிருப்பாரு!!!! காலங்காத்தால பூக்கூடைகள கொடுத்துட்டு டிசைன் சொல்வாரு. இந்த வருஷத்து மணப்பந்தல்தான் இங்க உள்ளது. பூவ வெச்சி மின் கோந்து துப்பாக்கியால ஒட்டி முடிக்கறதுக்குல, ஒரு நாலு, அஞ்சு பேராவது சூடு போட்டுக்குவோம்.

கல்யாணக் களைப்புல வள்ளி, தெய்வானை மணவாளன்














திருக்கல்யாணம் தாரை வார்த்து கொடுப்பது, அந்த வருஷம் இளைஞரணியில திருமணமான புதுத்தம்பதிகள்.

தண்டிகையில் - திருமண ஊர்வலம்














திருக்கல்யாணம் முடிஞ்சவுடன், தம்பதிகள் தண்டிகைங்கிற இந்த வாகனத்திலதான் வீதிவலம் வருவாங்க. பார்க்க மயிலு மாதிரி இருக்கும். இதில வீதிவுலா பார்க்கும்போது, நமக்கே ஒரு பொன்னூஞ்சல்ல போன பிரமை பிடிக்கும்.
















திருக்கல்யாண கூட்டமும், கலைஞர்களும்















திருக்கல்யாணத்தன்னிக்கி கூட்டம் மென்னிய புடிக்கும். சாம்பிளுக்கு எள்ளு போட்டா எண்ணெயாயிடும். அவுக அவுக, கல்யாண சேலையெல்லம் அன்னைக்கிதான் மக்கள் தரிசனம் எடுக்கும்.

நாயனம், மேளம் எல்லாம் நம்ப இலங்கை, நம்ப ஊருல இருந்து வந்து பத்து நாளும் காது குளிரப் பண்ணுவாங்க!!!!

இப்படியாக, இளைஞரணி பட்டு வேஷ்டியிலயும், புடவையிலும் கிளுகிளுப்பத பார்க்கிறப்போ "என்ன தவம்செய்தோம் சிங்காரவேலவான்னு" சின்னதா புளகாங்கிதம் அடையச்சொல்லும்.

No comments: